முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்றவர் ஜெயலலிதா... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு
தென்காசி: முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்றவர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
தென்காசியில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்தார். பின்னர் நிருபர்களை சந்தித்தார்.

அவர்களிடம் இளங்கோவன் பேசுகையில், கோலாலம்பூரில், இந்திய பிரதமர் மோடி மலேசிய நாட்டு பிரதமரோடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தியாவின் தேசிய கொடி தலை கீழாக இருந்ததை கண்டு எதுவும் கூறாமல் அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடாமல் இருந்தது மிகவும் வருத்தத்திற்குரியது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூறுகையில் தமிழகத்தில்உள்ள பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணங்கள் குறித்தும் மத்திய அரசிடம் இதுவரை எந்த விதமான உதவிகளையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.
தமிழக மக்கள் படும் கஷ்டங்கள், துயரங்கள் பொருட் சேதம் குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை இந்த மாநில அரசு. இன்று மக்கள் 10 நாட்களாக கஷ்டங்களையும், வேதனைகளையும் சந்தித்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் இதுவரை மத்திய அரசை வெள்ள சேதங்கள் குறித்த எந்த உதவிகள் தேவை என்பது குறித்து கேட்கவில்லை என்பது ஜெயலலிதாவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்றவராக இருக்கிறார். இந்தியா இதுவரை இவரைப்போன்ற முதல்வரை கண்டதில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications