அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தீபாவிற்குதான் தகுதி இருக்கிறது.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடி
அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தீபாவிற்குத்தான் தகுதி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி தீபாவிற்குத்தான் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், பார்ப்பதற்கு ஜெயலலிதா போன்று தீபா இருக்கிறார் என்றும், ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்தவர் என்றும் கூறிய இளங்கோவன், தமிழகத்தின் முதல்வராகும் தகுதி தீபாவிற்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதுதவிர, அதிமுகவில் உள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் ஆகிய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தீபா மீது மட்டும்தான் ஊழல் கறையே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.