அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டாரா? ஈவிகேஎஸ் இளங்கோவன் பகீர்!
அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு போய்விட்டாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். சரோஜா மீது புகார் கொடுத்த பெண் அதிகாரி ராஜ மீனாட்சியும் திடீரென மாயமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்பதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜ மீனாட்சி குற்றம்சாட்டினார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசிய அமைச்சர் சரோஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மறுத்த சரோஜா
இதையடுத்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஆரஅமர அறிக்கை விட்ட சரோஜா தன் மீதான குற்றாட்டுகள் பொய்யானது. ராஜமீனாட்சி யார் என்றே தனக்கு தெரியாது என்றார்.

எங்கே போனார் சரோஜா?
இதன் பின்னர் அமைச்சர் சரோஜா மற்றும் அதிகாரி ராஜ மீனாட்சி குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அரசு விழாக்களிலும் அமைச்சர் சரோஜாவை காணமுடியவில்லை எனக்கூறப்படுகிறது.

வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா?
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் சரோஜாவை காணவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிகாரியும் மாயம்
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சரோஜாவை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சரோஜா மீது புகார் கொடுத்த பெண் அதிகாரி ராஜ மீனாட்சியும் திடீரென மாயமாகி விட்டதாகவும் ஈவிகேஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications