'அக்ரி'யை அதட்டி விசாரணைக்கு வரவழைத்து 'காப்பு' மாட்டிய சி.பி.சி.ஐ.டி. போலீஸ்!
சென்னை: வேளாண்மைத் துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி வழக்கில் விசாரணைக்கு வர தயக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை லேசாக மிரட்டித்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வரவழைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நெல்லை வேளாண்மை துறை முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பகலில் சென்னையில் வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் பதவியில் இருந்த எம்.செந்திலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவரும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்த அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் செல்போனில் பேசி, செந்திலும் பலமுறை மிரட்டியது தெரியவந்தது.

வாக்குமூலம் கொடுத்த செந்தில்
அப்போதைய வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்னதின் பேரில்தான், தான் செல்போனில் பேசி மிரட்டியதாக, செந்தில் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

குலதெய்வ கோவிலில்..
இதன் அடிப்படையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி.போலீசார் அழைத்தனர். சி.பி.சி.ஐ.டி.போலீசார் அழைத்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்.

வருகிறேன்..
உங்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைதான் நடத்த இருக்கிறோம், சிறிது நேரத்தில் விட்டு, விடுகிறோம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தார். உடனே அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சென்னை புறப்பட்டு வந்தார். அவர் சென்னை வந்து சேர்ந்த போது இரவு 8 மணிக்கு மேல் ஆகி விட்டது.

வரலைன்னா.. வருவோம்..
இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குபோய் சாப்பிட்டு விட்டு வருகிறேன் அல்லது மறு நாள் காலையில் வருவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி.பி.சி.ஐ.டி. அதிகாரியிடம் கூறியதாக தெரிகிறது. உங்களுக்கு சாப்பாடு நாங்கள் வாங்கி தருகிறோம், நீங்கள் உடனே வரவேண்டும், இல்லா விட்டால் நாங்கள் வந்து அழைத்து வர வேண்டி இருக்கும், என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சற்று அதட்டலாக கூறியிருக்கிறார்.

அதிகாலையில் கைது
இதனால் அச்சமடைந்த அக்ரி, விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கலாமா? என்று ஆலோசித்திருக்கிறார். இருப்பினும் ஆரம்ப கட்ட விசாரணை என நினைத்துதான் போனாராம்.. அங்கே விசாரணையை எதிர்கொள்ளும்போதே தாம் கைது செய்யப்படுவது உறுதி என தெரிந்ததும் ஆடிப்போனாராம் அக்ரி.
இதன் பின்னர் அதிகாலையில் கைது செய்யப்பட்ட அக்ரி நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications