சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் மழையின் காரணமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கல்லூரிகள், பல்கலைகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளுக்கும் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.