இலங்கை சிறையில் உள்ள 49 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள 49 தமிழக மீனவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன் பிடிக்க சென்ற 49 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 45 பேர் நேற்று பருத்தித்துறை, ஊர்க்காவல் துறை கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 18-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதே போல் வவுனியா சிறையில் உள்ள ராமேஸ்வரம், மீனவர்கள் 4 பேரும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் 18-ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications