மக்களை திசைதிருப்பிவிட்டு மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டுவர திட்டம்: முன்னாள் நீதிபதி
திருவாரூர்: மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி மக்களை திசை திருப்பிவிட்டு அத்திட்டத்தை கொண்டுவர வாய்ப்புள்ளதாக முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்திரிக்கையாளர் மருதம் கோகி எழுதிய, ''தேவை மரபு - மாறா மனிதர்கள்''. மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலம், போராட்ட களம். மீத்தேன் எடுப்பதால் எந்த அளவுக்கு பாதிப்புகள் வரும் அதனால் விவசாயம் மட்டுமின்றி விவசாயம் சார்ந்த அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள் என்ற புத்தகம் அறிமுக விழாவை மன்னார்குடி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
அவர் கூறியதாவது: மீத்தேன் அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார்கள், மாநில அரசும் அந்த திட்டம் இனி வராது என்று சொல்வதை நம்பக் கூடாது. உரிமம் காலாவதி என்றும் தமிழக அரசு சொல்கிறது. இரண்டும் தவறு. மக்களை திசைதிருப்பி கொண்டுவர இருப்பார்கள். இந்த மீத்தேன் திட்டம் வந்தால் 670 சதுர கிலோமீட்டர் வரை பாதிப்பு ஏற்படும்.
1794 ல் ஆங்கிலேயர் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை வைத்துக் கொண்டு இருந்தோம். அதனால் எந்த நேரத்திலும் யாருடைய நிலத்தையும் பறிக்கும் நிலை இருந்தது. ஆனால், காங்கிரஸ் அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல திட்டத்தை 2013 ம் ஆண்டு கொண்டு வந்திருக்கிறது. நில உரிமையாளர் அனுமதி இல்லாமல் கையளவு நிலம் கூட கையகப்படுத்த முடியாது. இப்ப அந்த சட்டத்தை திருத்த தான் மத்திய அரசு முயற்சிக்கிறது.
மீத்தேன் திட்டம் வந்தால் சொந்த நாட்டிலேயே புலம் பெயர வேண்டியது வரும். நம்மை காக்க நாம் தான் முயல வேண்டும். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications