தர்மபுரியில் டுபாகூர் பேங்க்... 1.60 லட்சம் அபேஸ்... 4 பேர் கைது
தர்மபுரி: தனியார் வங்கி பெயரில் சில எழுத்துக்களை கூடுதலாக சேர்ந்து போலி வங்கி நடத்திய 4 பேரை தர்மபுரி போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று கடந்த 2004ம் ஆண்டில் இருந்து எஸ் வங்கி இந்தியாவில் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் இதற்கு பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த எஸ் என்ற எழுத்துக்களுடன் ஏபிஎஸ் என்ற எழுத்துக்களையும் சேர்த்து எஸ் ஏபிஎஸ் வங்கி என்ற பெயரில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி எதிரில் போலி வங்கி ஒன்று கடந்த ஒருமாத காலமாக இயங்கி வந்திருக்கிறது.

இந்த தகவல்களை அறிந்து கொண்ட எஸ் வங்கியின் சேலம் கிளை மேலாளரும் துணைத் தலைவருமான சசிக்குமார், போலி வங்கிக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது இந்த வங்கி தங்கள் வங்கியின் பெயரில் போலியாக செயல்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, போலி வங்கி குறித்து சசிக்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைது செய்துள்ளனர்.
பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பாலாஜி, நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த சுந்தரேசன், இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் ஆகிய நால்வர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி வங்கி ஆரம்பித்த ஒரே மாதத்தில் 83 வாடிக்கையாளர்களை பெற்று சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை மக்களிடம் இருந்து வசூலித்துள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications