சென்னை வங்கியில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை செலுத்தியவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ13 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகளை இணைத்துவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன். இவர் நேற்று முன்தினம், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூபாய் 33 ஆயிரம் டெபாசிட் செய்தார்.
அந்த பணத்தை, பணம் எண்ணும் மெஷின் மூலம் வங்கி ஊழியர்கள் எண்ணிப்பார்த்துள்ளனர். அப்போது டெபாசிட் செய்த பணத்தில், ரூபாய் 13 ஆயிரம் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 26 இருந்தன.
உடனடியாக பணம் டெபாசிட் செய்த நாச்சியப்பனையும், ரூபாய் 13 ஆயிரம் கள்ளநோட்டுகளையும், வங்கி மேலாளர் உமா வடபழனி போலீசில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து கள்ளநோட்டுகளை கைப்பற்றி அது எப்படி கிடைத்தது என்று நாச்சியப்பனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications