பக்ரைன், மஸ்கட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் தப்பிவந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: பக்ரைனில் விபத்து ஏற்படுத்தியதால் சிறையில் இருந்த கேரள வாலிபர், போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பக்ரைனில் இருந்துவந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி(30) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதித்ததில் வேறு ஒருவர் பாஸ்போர்ட்டில் தனது போட்டோவை ஒட்டி எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு பக்ரைனுக்கு சென்று கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கு விபத்து ஒன்றில் சிக்கினேன். பக்ரைன் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 மாத சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்து, ஏஜெண்டுகளின் உதவியுடன் வேறு நபரின் பாஸ்போர்ட்டில் சென்னை வந்தேன் என்றார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம்(40) வேறு நபரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி மஸ்கட்டில் இருந்து விமானத்தில் சென்னை வந்த போது பிடிபட்டார். மஸ்கட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்த இவருக்கு உரிய சம்பளத்தை அங்குள்ளவர்கள் அளிக்காததால் தப்பியோடிவந்தபோது பிடிபட்டுள்ளார்.
இதையடுத்து போலி பாஸ்போர்ட்டில் வந்த ஷாஜி, ஆறுமுகம் இருவரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் வழக்குப்பதிவு செய்து கேரள வாலிபர் ஷாஜி, ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications