பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சர்ச்சை கேள்வியால் மாணவர்கள் குழப்பம் !
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சமூக அறிவியல் தேர்வில் பதிலே இல்லாத கேள்வி கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு கேள்வி தவறாக இடம்பெற்றத்தை கண்டு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினா கேள்வி பகுதியில் 13வது கேள்வியாக இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்? எனக் கேட்கப்பட்டிருந்தது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் திட்டக்குழு தலைவர் யார் எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் பாடப்புத்தக்கத்தில் திட்டக்குழு தலைவர் பிரதமர் என இருப்பதால் அதையே பதிலாக அளித்தாக சில மாணவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்த சர்ச்சை எழுந்ததும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருப்பதே இதுபோன்ற குழப்பத்திற்கு காரணம் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications