நாமக்கல்லில் 1 ஆம் வகுப்பு மாணவன் கடத்தல்.. சித்தப்பா கைது; பாட்டி, தாத்தாவிற்கு வலைவீச்சு!
நாமக்கல்: நாமக்கல்லில் பள்ளி வேனை வழிமறித்து 1 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை கடத்திய வழக்கில் அவனது சித்தப்பா போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், கடத்தலுக்கு காரணமான தாத்தா, பாட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சமுத்திரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா. இவரது மகன் லோகித் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளி வேனில் சென்றுள்ளான் லோகித்.
இந்த வேன் போக்கம்பளையம் என்ற இடத்தில் சென்றபோது பள்ளி வேனை வழிமறித்து லோகித்தை சிலர் காரில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து பள்ளியின் வேன் டிரைவர் திருச்செங்கோடு ரூரல் போலீசில் மாணவன் கடத்தப்பட்டதாக புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் லோகித்தை அவரது தாத்தா கன்னியப்பன், பாட்டி நிர்மலா மற்றும் சித்தப்பா மகேந்திரன் ஆகியோர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மகேந்திரனை கைது செய்த போலீசார், கன்னியப்பன், நிர்மலா மற்றும் மாணவன் லோகித் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் தீபிகாவின் கணவரும் லோகித்தின் தந்தையுமான ஜெய்கார்த்திக் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தீபிகா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 ஆவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது லோகித்தை தாங்கள் வளர்த்துக்கொள்கிறோம் என்று கன்னியப்பன், நிர்மலா, மகேந்திரன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். ஆனால் தீபிகா தனது மகனை தானே வளர்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மாணவன் லோகித் கடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications