35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள், இனி நீங்கள் நற்பணி நாயகர்கள்.. கமல்ஹாசன் பேச்சு!
நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நற்பணிகளின் நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசு குறித்தும் அரசின் நிர்வாகம் குறித்தும் டிவிட்டரில் விமர்சனம் செய்து வந்தார். அவரது விமர்சனங்களுக்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்து ரசிகர்களிடையே உரையாற்றினார்.

இனி நற்பணி நாயகர்கள்
அப்போது 35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள், இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் என்றார். நற்பணிகளின் நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது
நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு விட்டதாகவும் அதனை விரைவில் செயல்படுத்த போவதாகவும் அவர் கூறினார்.

தள்ளப்பட்டுள்ளோம்
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களிடம் கூறினார். நற்பணிகளில் மேலும் பல இணைய உள்ளனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதுவரை திட்டமிடவில்லை
மேலும் பிப்ரவலி 24ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அதுவெறும் புரளி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். பிப்ரவரி 24 ஆம் தேதி எந்த நிகழ்ச்சி குறித்தும் இதுவரை திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.

மக்களை சந்திக்க திட்டம்
பிப்ரவரி 21,22 மற்றும் 23ம் தேதிகளில் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications