35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள், இனி நீங்கள் நற்பணி நாயகர்கள்.. கமல்ஹாசன் பேச்சு!
நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நற்பணிகளின் நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசு குறித்தும் அரசின் நிர்வாகம் குறித்தும் டிவிட்டரில் விமர்சனம் செய்து வந்தார். அவரது விமர்சனங்களுக்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்து ரசிகர்களிடையே உரையாற்றினார்.

இனி நற்பணி நாயகர்கள்
அப்போது 35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள், இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் என்றார். நற்பணிகளின் நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது
நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு விட்டதாகவும் அதனை விரைவில் செயல்படுத்த போவதாகவும் அவர் கூறினார்.

தள்ளப்பட்டுள்ளோம்
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களிடம் கூறினார். நற்பணிகளில் மேலும் பல இணைய உள்ளனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதுவரை திட்டமிடவில்லை
மேலும் பிப்ரவலி 24ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அதுவெறும் புரளி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். பிப்ரவரி 24 ஆம் தேதி எந்த நிகழ்ச்சி குறித்தும் இதுவரை திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.

மக்களை சந்திக்க திட்டம்
பிப்ரவரி 21,22 மற்றும் 23ம் தேதிகளில் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications