கருகிய பயிர்களைக் கண்ட விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை- மாரடைப்பில் மற்றொருவர் பலி
திருவாரூர் மாவட்டத்தில் வயலில் கருகிய நெற்பயிர்களைக் கண்டு மனமுடைந்த விவசாயி விஜயகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் / தூத்துக்குடி: தமிழகத்தில் பருவமழை பொய்து போனதால் வறட்சி தாண்டவமாடுகிறது. குளங்கள், நீர்நிலைகள் வறண்டுவிட்டனர். சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தொடர்ந்து பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மனமுடைந்து மாண்டு வருகின்றனர்.
மன வேதனையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வங்கத்தான்குடியில் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று கயத்தார் அருகே வாகைத்தாவூர் மேலத்தெருவை சேர்ந்த விவசாயி மாரடைப்பில் மரணமடைந்தார். தனக்கு சொந்தமான மானவரி நிலத்தில் மக்காசோளம் பயிர் செய்திருந்தார். இதற்காக கயத்தார் வங்கியில் நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் போதிய அளவு மழை இல்லாததால் செடிகள் வாட தொடங்கின. இதை பார்த்த அவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்த நிலையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்ற வேலு பயிர்கள் வாடிய தூக்கம் தாங்காமல் அங்கேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதனால் அந்தபகுதி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications