கருகிய பயிர்களைக் கண்ட விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை- மாரடைப்பில் மற்றொருவர் பலி
திருவாரூர் மாவட்டத்தில் வயலில் கருகிய நெற்பயிர்களைக் கண்டு மனமுடைந்த விவசாயி விஜயகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் / தூத்துக்குடி: தமிழகத்தில் பருவமழை பொய்து போனதால் வறட்சி தாண்டவமாடுகிறது. குளங்கள், நீர்நிலைகள் வறண்டுவிட்டனர். சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தொடர்ந்து பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மனமுடைந்து மாண்டு வருகின்றனர்.
மன வேதனையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வங்கத்தான்குடியில் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று கயத்தார் அருகே வாகைத்தாவூர் மேலத்தெருவை சேர்ந்த விவசாயி மாரடைப்பில் மரணமடைந்தார். தனக்கு சொந்தமான மானவரி நிலத்தில் மக்காசோளம் பயிர் செய்திருந்தார். இதற்காக கயத்தார் வங்கியில் நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் போதிய அளவு மழை இல்லாததால் செடிகள் வாட தொடங்கின. இதை பார்த்த அவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்த நிலையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்ற வேலு பயிர்கள் வாடிய தூக்கம் தாங்காமல் அங்கேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதனால் அந்தபகுதி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications