ஓகி புயல் பாதிப்பு.. நிவாரணம் கோரி கன்னியாகுமரியில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு.. பதற்றம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய சங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை கடலில் இருந்தபடியே நெருங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஏராளமான ரப்பர் மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயலால் கொட்டித் தீர்த்த மழையால் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

குமரியில் முழு அடைப்பு
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரியும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரியும் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பேருந்துகள் இயக்கப்படவில்லை
இதில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

குமரியில் பதற்றம்
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக குழித்துறை,திருவட்டாறு, பயணம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப்பகுதியான களியாக்காவிளையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications