காவிரி: மோடியின் உருவ பொம்மை எரிப்பு.. விவசாய சங்கத்தினர் 12 பேர் கைது
சென்னை: சென்னை தாம்பரத்தில் மோடியின் உருவ பொம்மையை எரித்த விவசாய சங்கத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இந்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மோடியின் உருவ பொம்மையை எரித்த விவசாய சங்கத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கும்பகோணத்தில் மோடியின் உருவ பொம்மையை எரித்த தமிழ் தேசிய பேரியக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications