விவசாயிகள் தினத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை- தமிழகத்தில் இதுவரை 34 பேர் பலி

நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை 34 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இந்தியாவில் இன்று விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என நாடு முழுவதும் விவசாயிகள் கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து விட்டது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் உடைந்து விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர்.

 Farmers day: Farmers commit suicide in Nagapattinam district

கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிர்ச்சியில் மரணமடைவதும் நீண்டு கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 பேரும், திருவாரூரில் 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1, நெல்லை மாவட்டத்தில் 1, திருவள்ளூர் மாவட்டத்தில் 1, ஈரோடு மாவட்டத்தில் 2 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தைக்குடியில் விவசாயி தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி தியாகராஜன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயிகள் தற்கொலை மற்றும் மனமுடைந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 34 விவசாயிகளின் குடும்பங்களை முதல்வரோ, அல்லது அமைச்சர்களோ யாரும் நேரில் சந்தித்து இதுவரை ஆறுதல் கூட கூறவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும் விவசாயிகளும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா நெல் சாகுபடியிலாவது பிழைத்துக் கொள்ளாலம் என நினைத்த தமிழக விவசாயிகளின் கனவு இந்த ஆண்டும் பலிக்கவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+