பயிர்க்கடனை மத்திய கடனாக மாற்ற எதிர்ப்பு.. தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள விவசாயிகள், பயிர் மற்றும் நடகக்கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை மத்தியக்கடனாக மாற்ற வழிவகை செய்யப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். விவசாயிகள் பெற்றுள்ள கடன் மத்தியக் கால கடனாக மாற்ற வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வறட்சி பாதித்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விவசாயிகள் பயிர்க்கடன்களை மத்திய கடனாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயமே பொய்த்துப் போயுள்ள நிலையில் மத்திய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ மாற்றுவது பயனளிக்காது என்று கூறியுள்ளனர்.
விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களை அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் தங்களால் வட்டிக் கட்டவோ அல்லது கடனை திருப்பி செலுத்தவோ முடியாது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications