காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு வீரவாள், ஏர்கலப்பை பரிசு!
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு வீரவாள், ஏர்கலப்பை ஆகியவற்றை விவசாய சங்கத்தினர் நேரில் சந்தித்து பரிசு அளித்தனர்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு விவசாய சங்கத்தினர் வீரவாள், ஏர்கலப்பை ஆகியவற்றை நேரில் சந்தித்து பரிசு அளித்தனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதற்கு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் விவசாய சங்கங்களை சேர்ந்த அய்யாக்கண்ணு, தெய்வசிகாமணி ஆகியோர் இனுறு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர் கமல்ஹாசனுக்கு வீரவாள் மற்றும் ஏர் கலப்பையை பரிசாக அளித்தனர்.
அப்போது பேசிய அய்யாக்கண்ணுதமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்றார். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை விவசாய சங்க பிரதிநிதி தெய்வசிகாமணி கூறினார்.