காவிரி நீர் திறப்பு குறைப்பு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாளை முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்!!
சென்னை: 12 நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது யானைப் பசிக்கு சோளப் பொரி என்றும் இதனை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்க உள்ளதாகவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் தொடர்பாக இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அக். 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை வினாடிக்கு 2000 கன அடி நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, நீதி மீதான கொஞ்சம் நஞ்சம் உள்ள நம்பிக்கையையும் போகும் அளவுக்கு உள்ளது என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசிற்கு உச்சநீதிமன்றம் பணிந்து போய் விட்டதோ என்று தோன்றுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பி.ஆர். பாண்டியன் ஒன்இந்தியாவிற்கு கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் 12 நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாகத்தான் இருக்கிறது. இதனால் எந்த பயனும் விவசாயிகளுக்கு ஏற்படப் போவதில்லை. சுப்ரீம் கோர்ட் மாற்றி மாற்றி உத்தரவிடுவதன் மூலம் தமிழக மக்களை திசைப் திருப்புகிறது. குழப்பம் விளைவிக்கிறது.
இதனை எதிர்க்கும் வகையில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளோம். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications