காவிரி நீர் திறப்பு குறைப்பு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாளை முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்!!
சென்னை: 12 நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது யானைப் பசிக்கு சோளப் பொரி என்றும் இதனை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்க உள்ளதாகவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் தொடர்பாக இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அக். 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை வினாடிக்கு 2000 கன அடி நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, நீதி மீதான கொஞ்சம் நஞ்சம் உள்ள நம்பிக்கையையும் போகும் அளவுக்கு உள்ளது என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசிற்கு உச்சநீதிமன்றம் பணிந்து போய் விட்டதோ என்று தோன்றுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பி.ஆர். பாண்டியன் ஒன்இந்தியாவிற்கு கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் 12 நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாகத்தான் இருக்கிறது. இதனால் எந்த பயனும் விவசாயிகளுக்கு ஏற்படப் போவதில்லை. சுப்ரீம் கோர்ட் மாற்றி மாற்றி உத்தரவிடுவதன் மூலம் தமிழக மக்களை திசைப் திருப்புகிறது. குழப்பம் விளைவிக்கிறது.
இதனை எதிர்க்கும் வகையில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளோம். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications