மகள் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை விற்றுக் குடித்த தந்தை... தட்டிக் கேட்ட மகனை வெட்டித் தள்ளினார்!
திருவாரூர்: தனது தங்கையின் கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த சீர்வரிசைப் பொருட்களையெல்லாம் விற்று குடித்த தந்தையைப் பார்த்து ஆத்திரமடைந்த மகன் அவருடன் சண்டை பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகன் என்றும் பாராமல் வெட்டிக் கொலை செய்து விட்டார்.
குடியால் அழியும் குடும்பங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடியின் கொடுமைக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருவாரூரில் குடிகார தந்தையால் ஒரு மகன் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவா் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய மகன் செல்வகுமார் (23). கட்டடத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தனது சகோதரியிந் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். அதையும் செல்வராஜ் குடிப்பதற்காக விற்று விட்டார்.
இதனால் கொதிப்படைந்த செல்வகுமார் தனது தந்தையைத் திட்டியுள்ளார். அவருடன் சண்டை பிடித்துள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி பிற்பகலில் நன்றாக குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார் செல்வராஜ். அப்போது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரத்தின் உச்சிக்குப் போன செல்வராஜ், வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து மகனின் கழுத்தில் ஓங்கி வெட்டி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வராஜை தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications