மனைவியுடன் சண்டை போட்டு 4 மாதக் குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை!
திருவாரூர்: திருவாரூர் அருகே 4 மாதக் குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் அன்னுக்குடியைச் சேர்ந்தவர் மாதவன் (25). இவர் திருவாரூர் மருதப்பட்டினத்தைச் சேர்ந்த வைஷ்ணவி (25) என்ற பெண்ணை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 மாத ரோஹித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், திருமணம் ஆன 5 மாதத்திலிருந்து மாதவன் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவி மருதப்பட்டணத்தில் உள்ள தனது தந்தைவீட்டுக்கு சென்று சிறிது காலம் இருந்துள்ளார்.
இதனிடையே நேற்று மருதப்பட்டிணம் சென்ற மாதவன், வைஷ்ணவியுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது, குழந்தையை வைஷ்ணவியிடம் இருந்து பிடுங்கியுள்ளார். வைஷ்ணவி குழந்தையை தராததால் ஆத்திரமடைந்த மாதவன், குழந்தையை பிடுங்கி சுவற்றில் வீசிவிட்டாராம்.

இதையடுத்து, குழந்தையை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிசிகிச்சைப் பலனின்றி குழந்தை ரோஹித் இன்று அதிகாலை உயிரிழந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மாதவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications