மனைவியுடன் சண்டை போட்டு 4 மாதக் குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை!
திருவாரூர்: திருவாரூர் அருகே 4 மாதக் குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் அன்னுக்குடியைச் சேர்ந்தவர் மாதவன் (25). இவர் திருவாரூர் மருதப்பட்டினத்தைச் சேர்ந்த வைஷ்ணவி (25) என்ற பெண்ணை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 மாத ரோஹித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், திருமணம் ஆன 5 மாதத்திலிருந்து மாதவன் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவி மருதப்பட்டணத்தில் உள்ள தனது தந்தைவீட்டுக்கு சென்று சிறிது காலம் இருந்துள்ளார்.
இதனிடையே நேற்று மருதப்பட்டிணம் சென்ற மாதவன், வைஷ்ணவியுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது, குழந்தையை வைஷ்ணவியிடம் இருந்து பிடுங்கியுள்ளார். வைஷ்ணவி குழந்தையை தராததால் ஆத்திரமடைந்த மாதவன், குழந்தையை பிடுங்கி சுவற்றில் வீசிவிட்டாராம்.

இதையடுத்து, குழந்தையை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிசிகிச்சைப் பலனின்றி குழந்தை ரோஹித் இன்று அதிகாலை உயிரிழந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மாதவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications