நாளை இந்த "பச்சைக் குழந்தை" கதறி அழப் போவதைப் பார்க்க பேஸ்புக்கில் ஒரு படையே காத்திருக்கு பாஸ்!
சென்னை: ஜெயலலிதா வழக்கில் நாளை தீர்ப்பு வரப் போவதைத் தொடர்ந்து அதிமுகவினர், எதிர்க்கட்சிக்காரர்கள், தமிழக மக்கள், இந்திய மக்கள் என அனைவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளுடன் காத்திருப்பதைப் போல பேஸ்புக், டிவிட்டரிலும் விதம் விதமான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் செம ஆவலாக காத்துள்ளனர்.
மக்களும், கட்சியினரும் ஜெயலலிதாவுக்கு என்னாகுமோ என்ற கவலையிலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள் என்றால், பேஸ்புக், டிவிட்டரில் காத்திருப்போர் வேற ரேஞ்சில் காத்திருக்கிறார்கள். காரணம், இவர்கள் எப்போதுமே வேற மாதிரி.. அதுக்கும் மேல ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த. ரகளைப் பார்ட்டிகள் கையில் இப்போது ஒரு அதிமுககாரர் சிக்கியுள்ளார். அவர் கடந்த முறை ஜெயலலிதா தீர்ப்பு வெளியானபோது அனைவரின் கண்ணிலும் சிக்கி அனாமத்தா கமெண்டுகளை வாங்கிக் குவித்தவர்.
ஜெயலலிதா விடுதலையாகி விட்டதாக முதலில் வந்த செய்தியைப் பார்த்து லட்டு சாப்பிட்டு வாயெல்லாம் பல்லாக சிரித்த அந்தத் தொண்டர், அம்மாவுக்கு சிறை என்று அடுத்த சில நிமிடங்களில் நிலை மாறியபோது டக்கென அழுகைக்கு மாறி அனைவரையும் அயரடித்தவர்.
அந்த ஆஜானுகுபாகுவான தொண்டரைத்தான் இப்போதும் பேஸ்புக்கில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பலர் போஸ்ட்டுகளையும் போட ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் பச்சைக் குழந்தையை மறுபடியும் அழ வச்சுராதீங்க ஜட்ஜய்யா என்று வேண்டுகோள் வேறு...!
பார்க்கலாம், நாளை 'குழந்தை' சிரிக்குதா இல்லை கதறித் துடிக்குதா என்று...!
(பாஸ், பாஸ்... மறக்காமல் எங்கிருந்தாலும் நாளை ஜெயா டிவி கேமரா முன்பு ஆஜராகி விடுங்க பாஸ்... அட வாங்க பாஸ்...!)












Click it and Unblock the Notifications