For Daily Alerts
Just In
சபாஷ்... சென்னையில் தப்பி ஓடிய கைதியை துரத்தி பிடித்த பெண் போலீஸ் !
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு ஒன்றில் சென்னையை சேர்ந்த சூர்யா (வயது 23) என்ற இளைஞரை என்4 காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவரை இன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த கைதியுடன் இரண்டு ஆண் காவலர்களும், ஒரு பெண் தலைமை காவலரும் சென்றிருந்தனர். கைதி சூர்யா திடீரென தப்பி ஓடினார். இதனை எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியடைந்து அவரை பிடிக்க முயன்றனர். அவர் தப்பி ஓடிய நிலையில் பெண் தலைமை காவலர் சிவகாமி அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று கைதியை பிடித்து விட்டார். அவரது இந்த தீரச் செயல் பெண் காவலர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக மாறியுள்ளது.
English summary
female police capure prisoner in chennai
Story first published: Saturday, October 8, 2016, 23:35 [IST]