டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம்.. அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விளாசியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விளாசியுள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக் கட்சி தொடங்கியது, சசிகலா புறக்கணிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்களை திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். அதாவது சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று கூட பார்க்காதவர் திவாகரன் என அவர் சாடினார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிப்பதாகவும் அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது என்றும் தினகரன் தெரிவித்தார்.சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார்; சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும் என்றும் தினகரன் கூறினார்.
இந்நிலையில் திவாகரன் - தினகரன் இடையிலான மோதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சென்னை டிடிவி தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார்.
அந்த நாடகத்தை பற்றி தற்போது கருத்து சொல்ல முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.