ஸ்ரீதேவியின் மறைவை ஏற்கவே முடியவில்லை.. சக நடிகைகள் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு சக திரையுலக நடிகைகள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு சக திரையுலக நடிகைகள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். பலரும் டிவிட்டரில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குஷ்பு, ராதா, கௌதமி, நடிகை லட்சுமி, திரிஷா ஆகிய நடிகைகள் ஸ்ரீதேவி மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.
|
குஷ்பூ இரங்கல்
குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் ''மிகவும் மோசமான செய்தியுடன் இன்றைய நாள் எழுந்து இருக்கிறேன். ஸ்ரீதேவி இனி நம்முடன் இருக்க போவதில்லை. மிகவும் அழகான, திறமையான நடிகை அவர். இதை பற்றி பேச எனக்கு வார்த்தைகளே இல்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீதேவியின் குழந்தை சிரிப்பை தவறவிட்டுவிட்டோம்'' என்றுள்ளார்.

ராதா இரங்கல்
அதேபோல் அவரது சமகால நடிகை ராதா ''ஸ்ரீதேவியின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு இந்த செய்தி மிகுந்து வருத்தத்தை அளிக்கிறது'' என்றுள்ளார்.

கௌதமி இரங்கல்
அவரின் தோழியின் சக நடிகையுமான கௌதமி ''ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவர் மிக மிக திறமையான நடிகை. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றுள்ளார்.

திரிஷா மற்றும் லட்சுமி
மேலும் நடிகை லட்சுமி ''ஸ்ரீதேவி யதார்த்தமான குழந்தை போன்றவர்'' என்றுள்ளார். திரிஷா ''வாழ்க்கை எத்தனை சிறிது என்று ஸ்ரீதேவியின் மறைவை உணர்த்துகிறது'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications