சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! பயங்கர சப்தம் கேட்டதால் பரபரப்பு
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்படுவதும் அதில் சிக்கி உயிரிழப்புகளும் நடக்கின்றன. இந்த துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தகவலின்பேரில் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். பட்டாசுகளை திறந்த வெளியில் செய்ய வேண்டும், மிக குறுகிய இடத்தில் வெடிகளை செய்யக் கூடாது, குறுகிய அறையில் நிறைய பேரை வைத்து வேலை வாங்கக் கூடாது என்றெல்லாம் விதிகள் உள்ளன. அவற்றை மீறும் போது இது போல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications