சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ- ஆவணங்கள் எரிந்து நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

கீழ்தளத்தில் உள்ள அறையில் தீப்பிடித்ததால் ஏராளமான ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.

தீவிபத்தின் காரணமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications