சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் தீ விபத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் சேப்பாக்கம் எழிலகத்தின் முதல் மாடியில் பற்றிய தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னையில் உள்ள மிகப் பழமையான கட்டிடங்களில் ஒன்று சேப்பாக்கம் காமராஜர் சாலையில் மெரினா கடற்கரைக்கு எதிரே உள்ள எழிலகமும் ஒன்று. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 16-ந் தேதியன்று எழிலகத்தின் 3வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னர் 2012ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதியன்று நள்ளிரவில் இதே எழிலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் அன்பழகன் பலியானார். பல தீயணைப்பு துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் முக்கிய அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

Fire at Chennai Ezhilagam building

இந்த நிலையில் இன்று பகலில் எழிலகத்தின் முதலாவடி மாடியில் திடீரென தீ பற்றி எரிந்தது. தீ பரவியதில் முதலாவது மாடியில் இருந்த வேளாண்துறை அலுவலகம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+