For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாம்பரம் தனியார் நிறுவத்தில் பயங்கர தீ விபத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள ஏற்றுமதி தொழில் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென எறிவதை பார்த்து சிலர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொ1டுத்தனர். தாம்பரம், கிண்டி,அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை கட்டுக்குள் கொண்டு வர சுமார் மூன்று மணி நேரம் பிடித்தது.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்
பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Fire brokeout at a private godown in Thambaram industrial area, 15 fire tenders were rushed to the spot which take 3 hours brought the blaze under control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X