For Daily Alerts
Just In
சென்னை, அண்ணாசாலை எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் திடீர் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை: சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணாசலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அங்குள்ள இன்வர்டரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென அருகில் உள்ள அறைகளுக்கும் பற்றியது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் எல்.ஐ.சி வசூல் பணம் ரூ.10 லட்சம் தீயில் கருகியதாகவும், கணிணி உள்ளிட்ட பிற பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியதாகவும் கூறப்படுகிறது.
Comments
English summary
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Story first published: Wednesday, September 21, 2016, 3:38 [IST]