இதோ இதுதான் கள்ளக்காதலுக்கு கிடைத்த பரிசு.. காதலியை கொன்ற குற்றவாளி இளையராஜா சிறையில் தற்கொலை!
சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றி கொன்ற குற்றவாளி இளையராஜா புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்த நிவேதிதா, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவனை இழந்த நிவேதிதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் இளையராஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை விட்டு பிரிந்த நிவேதிததா இளையராஜாவுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் கணபதி என்பவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

மற்றொருவருடன் பழக்கம்
இளையராஜாவுடன் உறவில் இருந்த சமயத்திலேயே கணபதியுடனும் நிவேதிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நிவேதிதா,கணபதிக்கு பணம் கொடுத்து உதவியதால் அந்த பணத்தை வாங்குவதற்காக இளையராஜாவுடனேயே காரில் சென்னை வந்துள்ளார்.

வேறொருவருடன் பழக்கத்தால் கோபம்
சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகே கணபதிக்கும், நிவேதிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஆத்திரமடைந்து கணபதியை கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்த போது தவறுதலாக அதில் நிவேதிதா சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

கொல்ல திட்டம்
ஆனால் நிவேதிதா கணபதியுடன் பேசிப்பழகுவது பிடிக்காமல் சென்னைக்கு புறப்படும் போதே இருவரையும் கொன்றுவிடும் திட்டத்தில் கிளம்பி வந்ததாகவும் ஆனால் கணபதி உயிர்தப்பி, நிவேதிதா மட்டும் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதலில் விபத்தாக கருதப்பட்ட ஆசிரியை நிவேதிதா வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்ட தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்கொலை முடிவு
இந்நிலையில் காலையில் கழிவறைக்கு செனற இளையராஜா தான் அணிந்திருந்த லுங்கியை ஜன்னல் கம்பியில் கட்டி, தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இளையராஜா உயிரிந்ததையடுத்து அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications