இதோ இதுதான் கள்ளக்காதலுக்கு கிடைத்த பரிசு.. காதலியை கொன்ற குற்றவாளி இளையராஜா சிறையில் தற்கொலை!
சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றி கொன்ற குற்றவாளி இளையராஜா புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்த நிவேதிதா, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவனை இழந்த நிவேதிதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் இளையராஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை விட்டு பிரிந்த நிவேதிததா இளையராஜாவுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் கணபதி என்பவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

மற்றொருவருடன் பழக்கம்
இளையராஜாவுடன் உறவில் இருந்த சமயத்திலேயே கணபதியுடனும் நிவேதிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நிவேதிதா,கணபதிக்கு பணம் கொடுத்து உதவியதால் அந்த பணத்தை வாங்குவதற்காக இளையராஜாவுடனேயே காரில் சென்னை வந்துள்ளார்.

வேறொருவருடன் பழக்கத்தால் கோபம்
சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகே கணபதிக்கும், நிவேதிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஆத்திரமடைந்து கணபதியை கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்த போது தவறுதலாக அதில் நிவேதிதா சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

கொல்ல திட்டம்
ஆனால் நிவேதிதா கணபதியுடன் பேசிப்பழகுவது பிடிக்காமல் சென்னைக்கு புறப்படும் போதே இருவரையும் கொன்றுவிடும் திட்டத்தில் கிளம்பி வந்ததாகவும் ஆனால் கணபதி உயிர்தப்பி, நிவேதிதா மட்டும் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதலில் விபத்தாக கருதப்பட்ட ஆசிரியை நிவேதிதா வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்ட தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்கொலை முடிவு
இந்நிலையில் காலையில் கழிவறைக்கு செனற இளையராஜா தான் அணிந்திருந்த லுங்கியை ஜன்னல் கம்பியில் கட்டி, தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இளையராஜா உயிரிந்ததையடுத்து அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications