“மீன்களை சாப்பிடாதீர்கள்”.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எண்ணூர் கடலில் கப்பல் மோதியதால் கொட்டியுள்ள எண்ணெய்யால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மீன்களை உண்ண பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், பிடித்து வரும் மீன்கள் விலை போகாமல் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கப்பல் மோதி கொட்டிய எண்ணெய் படலம் கடல் நடுவில் இருந்தால் நவீனகருவியின் துணை கொண்டு அகற்ற முடியும். ஆனால் எண்ணெய் படலம் கரையோரம் ஒதுங்கியுள்ளதால் நவீன கருவியை பயன்படுத்த முடியவில்லை.
இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் எண்ணெய் படலம் கிடையாது. அங்கு சென்றுதான் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அதனால் யாரும் மீன் சாப்பிட அச்சப்பட தேவையில்லை. எண்ணெய் கசிவால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை. மீன் சாப்பிடாதீர்கள் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ரூ.49 கோடியே 49 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளனர். ரூ.124 கோடி இழப்பீடு தருமாறு 3 மாவட்ட மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களுக்கு உரிய இழப்பிடு அரசு வழங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications