“மீன்களை சாப்பிடாதீர்கள்”.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எண்ணூர் கடலில் கப்பல் மோதியதால் கொட்டியுள்ள எண்ணெய்யால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மீன்களை உண்ண பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், பிடித்து வரும் மீன்கள் விலை போகாமல் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கப்பல் மோதி கொட்டிய எண்ணெய் படலம் கடல் நடுவில் இருந்தால் நவீனகருவியின் துணை கொண்டு அகற்ற முடியும். ஆனால் எண்ணெய் படலம் கரையோரம் ஒதுங்கியுள்ளதால் நவீன கருவியை பயன்படுத்த முடியவில்லை.
இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் எண்ணெய் படலம் கிடையாது. அங்கு சென்றுதான் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அதனால் யாரும் மீன் சாப்பிட அச்சப்பட தேவையில்லை. எண்ணெய் கசிவால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை. மீன் சாப்பிடாதீர்கள் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ரூ.49 கோடியே 49 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளனர். ரூ.124 கோடி இழப்பீடு தருமாறு 3 மாவட்ட மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களுக்கு உரிய இழப்பிடு அரசு வழங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications