மெரினாவில் தவிக்கும் பெண்கள், குழந்தைகள்.. படகில் உணவு, தண்ணீர் சப்ளை செய்யும் மீனவர்கள்
சென்னை: மெரினா கடற்கரையில் எஞ்சியுள்ள போராட்டக்காரர்களுக்கு மீனவர்கள் படகு மூலம் உணவு, தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்கள்.
மெரினாவில் இன்று போலீசார் தடியடி நடத்தியதையடுத்து பல ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை நகருக்குள் ஓடினர். அதேநேரம், சில பெண்களும், ஆண்களும் கடலை நோக்கி ஓடினர். இதனால் அச்சமடைந்த போலீசார் விரட்டுவதை நிறுத்திவிட்டனர்.
Fishermen come out in support of the protesters at Chennai's Marina Beach #Jallikattu pic.twitter.com/O51vPseSq1
— ANI (@ANI_news) January 23, 2017
நெருங்கி சென்றால் கடலுக்குள் சென்றுவிடலாம், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதும் போலீசார் போராட்டக்காரர்களை விட்டு சற்று தூரம் தள்ளியே நிற்கிறார்கள். போராட்டக்காரர்களில் பெண்களும், குழந்தைகளும் கூட இருக்கிறார்கள். வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், பசியாலும் அதில் சிலர் சுருண்டு விழுந்துள்ளனர்.
உணவு, தண்ணீர் கொண்டு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை அறிந்த மீனவர்கள், படகுகள் மூலம் விரைந்து வந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடும், தண்ணீரும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் வெப்பத்தில் எவ்வளவு நேரம் பெண்கள், குழந்தைகள் நிற்க முடியும் என்பது புரியவில்லை. அவர்களில் பலரும் தங்கள் கைகளில் அப்துல் கலாம் போட்டோக்களை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications