மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தற்கொலை முயற்சி- 5 பேர் உயிரிழந்தனர்
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தற்கொலைக்கு முயற்சித்தனர். இதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பரிதாபம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை-வீடியோ
மதுரை: மதுரையில் ஏலச் சீட்டு நடத்தி வந்த குறிஞ்சி குமரன் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த குறிஞ்சி குமரன் ஏலச் சீட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று மாலை குறிஞ்சி குமரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications