For Quick Alerts
For Daily Alerts
Just In
போளூர் அருகே பயங்கரம்.. வேன் - பஸ் மோதலில் 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை: போரூர் அருகே எட்டிவாடி என்ற இடத்தில் தனியார் பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.
செய்யாறு பகுதியில் இருந்து திருமண நிச்சயத்திற்கு கலசப்பாக்கத்திற்கு வேனில் சென்றனர். நிச்சயம் முடிந்து செய்யாறு திரும்பிய போது எட்டிவாடி என்ற இடத்திற்கு வந்த போது திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் வேனில் இருந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த உடன் சம்பவ இடத்தில் இருந்து பேருந்து கண்டக்டர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போளூர் டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Comments
English summary
Five persons were killed when a van they were travelling in collided with a Private bus near Polur in Tiruvannamalai district.