ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆசிரியை திட்டியதால் அரளிவிதை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த 5 மாணவிகள் அரளிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி ஆசிரியை கண்டித்ததால் 5 மாணவிகள் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது இப்பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி. ஆகிய 5 மாணவிகளும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நேற்று தேர்வோ சிறப்பு வகுப்போ எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் 5 பேரும் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதனைப்பார்த்த ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின் என்பவர், தேர்வு இல்லாத நேரத்தில் ஏன் பள்ளிக்கு அவசியமே இல்லாமல் வந்திருக்கிறீர்கள் என கண்டித்துள்ளார். இதில் மாணவிகள் மிகுந்த மனவேதனையடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அருகில் உள்ள கண்மாய் கரையில் சென்று அங்கிருந்த அரளி விதைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்கள் பதறியடித்து கண்மாய் பகுதி சென்று மாணவிகளுக்கு முதலுதவி செய்தனர். பின்னர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மாணவிகளை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications