ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆசிரியை திட்டியதால் அரளிவிதை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த 5 மாணவிகள் அரளிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி ஆசிரியை கண்டித்ததால் 5 மாணவிகள் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது இப்பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி. ஆகிய 5 மாணவிகளும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நேற்று தேர்வோ சிறப்பு வகுப்போ எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் 5 பேரும் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதனைப்பார்த்த ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின் என்பவர், தேர்வு இல்லாத நேரத்தில் ஏன் பள்ளிக்கு அவசியமே இல்லாமல் வந்திருக்கிறீர்கள் என கண்டித்துள்ளார். இதில் மாணவிகள் மிகுந்த மனவேதனையடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அருகில் உள்ள கண்மாய் கரையில் சென்று அங்கிருந்த அரளி விதைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்கள் பதறியடித்து கண்மாய் பகுதி சென்று மாணவிகளுக்கு முதலுதவி செய்தனர். பின்னர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மாணவிகளை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications