திமுக மாநாட்டின் 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் : ஸ்டாலின்
மாநாட்டுத் திடலைச் சுற்றியுள்ள 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு : ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெற்ற திடலைச்சுற்றி வைக்கப்பட்டிருக்கும் 4000 கொடிக்கம்பங்களும் மாவட்டத்தில் உள்ள கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திமுகவின் மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

இதில் திமுக புதிய ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், மாநாட்டுத்திடலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள 4000 கொடிக்கம்பங்களும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டு முகப்பில், வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம்அப்புறப்படுத்தப்படாமல், இதே நெடுஞ்சாலையில் அனுமதிபெற்று நிரந்தரமாக நிறுவப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், மாநாட்டிற்கு வந்திருக்கும் தொண்டர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்ட கழிவறைகளும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications