Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அபியும், நானும்".. அவ பிரண்ட்தான்.. எப்படிங்க தப்பா பேசலாம்.. 2019ஐ உலுக்கிய டிக்டாக் அக்கப்போர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடம் நடந்த எத்தனையோ சம்பவங்களுக்கு நடுவில் பரபரப்பில்லாமல் வைத்திருந்தது டிக்டாக் சமாச்சாரங்கள்.. டிக்டாக்கினால் பல குடும்பங்கள் பிரிந்து வரும் நிலையில், இந்த வருடம் அதிகமாக பேசப்பட்ட ஒரு டிக்டாக் சம்பவம்தான் "அபியும் - வினியும்"!

தேவகோட்டை அருகே கடம்பா குடியைச் சேர்ந்த வினிதா என்ற 20 வயது பெண்ணுக்கு லியோ என்பவருடன் திருமணம் ஆனது. கணவன் வெளிநாட்டில் வேலை பார்க்க.. பொழுதை கழிக்க வினிதா டிக்டாக் உலகில் நுழைந்தார்.

அப்போதுதான், திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் அபியுடன் அறிமுகம் ஆனது.. நட்பு வளர்ந்தது.. நெருக்கம் கூடியது. இந்த சமயத்தில்தான் அதாவது, கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, புது மனைவியை பார்க்க ஆசையுடன் லியோ வெளிநாட்டில் இருந்து வந்தார். ஆனால் மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்ததாகவும், இதனால் வினிதாவின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் "நெருக்கமான" போட்டோக்களை கண்டு கணவர் அதிர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

நகைகள்

நகைகள்

பின்னர், மனைவியை மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்று நடந்த விஷயங்களை கூறி லியோ அறிவுறுத்தியும், வினிதா வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு அபியுடன் ஓடிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. வினிதாவின் குடும்பத்தினரே இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லி, போலீசில் புகார் அளித்து, அபியும், வினோதினியும் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோவையும் ஒப்படைத்தனர்.

அபி

அபி

இந்த புகாரின் பேரில் அபியையும், வினிதாவையும் தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினார்.இதனிடையே, அபியுடன் ஓடிப்போனதாக சொல்லப்பட்ட வினிதா சிவகங்கை ஸ்டேஷனில் திடீரென தஞ்சம் அடைந்தார். முன்னதாக, இவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், அபி என்ற பெண் தனக்கு வெறும் டிக்டாக் தோழிதான் என்றும் விளக்கம் அளித்தார். "அவ என் டிக்டாக் ஃபிரண்டு. வேற ஒன்னுமே கிடையாது. அந்த பொண்ணுகிட்டே ஏன் பேசுறேன்னு பிரச்சனை செய்தார். அதனாலதான் வீட்டை விட்டு போனேன்" என்றார் வினிதா.

விசாரணை

விசாரணை

எனினும், வினிதாவிடம் மகளிர் போலீசார் ஸ்பெஷல் கேர் எடுத்துதான் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த விசாரணை முடியும்வரை, வினிதாவை, தாய், அல்லது கணவனுடன் செல்லுமாறு போலீசார் சொன்னார்கள். ஆனால், இருவருடனும் போக வினிதா மறுத்துவிட்டார். அதனால், காரைக்குடியில் உள்ள மகளிர் ஹாஸ்டலில் தங்க வைத்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால் அங்கிருந்து வினிதா எஸ்கேப் ஆகி விட்டதாகவும், போகும்போது, ஹாஸ்டல் வார்டன் செல்போனையும் எடுத்து கொண்டு போய்விட்டதாகவும் சொல்லப்பட்டது.. இது சம்பந்தமாக அந்த பெண் வார்டன் புகாரும் தந்தாராம்.. இதற்கு பிறகு அபி - வினிதா பற்றின விசாரணை என்ன ஆனது என்று தெரியாவிட்டாலும், இந்த இந்த டிக்டாக் தோழிகளின் சம்பவம் மறக்க முடியாத ஒன்றாக பதிந்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+