பல ஊர்களில் வெள்ளம்.. நிரம்பிய வழியும் ஆறுகள்.. திறந்து விடப்படும் தண்ணீர்.. மக்களுக்கு எச்சரிக்கை!
சென்னை: தமிழகம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக விடமால் மழை பெய்துள்ளது. தமிழகம் முழுக்க இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ளது.

என்ன வெள்ளம்
தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. கடலூரில் விருத்தாசலம்-வடலூர் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வேறு எங்கு
ரோமாபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர்திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 48 அடியில் 45 அடி வரை உயர்ந்ததால் நீர்திறக்கப்பட்டு வருகிறது.

அணை எப்படி
அணைக்கு நீர்வரத்து 2,200 கன அடியாக இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அருகே ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக கடலூர் - சேலம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

காவிரி என்ன
அதேபோல் காவிரியில் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடலூரில் தொடர் மழையால் வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு காரணமாக 5,300 கன அடி நீர்திறக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 28,500 கன அடி நீர்திறக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications