நெல்லை மாவட்ட வெள்ளம்... செங்கோட்டையில் அடித்து செல்லப்பட்ட பாலத்தின் தூண்கள்

நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த மழை காரணமாக செங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் தூண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த மழை காரணமாக செங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் தூண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகியது. இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள நீர் நிலைகள், கால்வாய்களுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

Flood in Sengottai has demolished pillars of Canals

பல இடங்களில் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்களுக்கு சேதம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கண்ணுப்புள்ளிமேட்டு கூடாறு அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. இதன் காரணமாக குளம் உடைந்துவிடாமல் இருக்க குளத்தின் நீரை தஞ்சாவூர் குளத்தின் வாய்க்காலில் திறந்து விட்டனர்.

இந்த வாய்க்கால் செங்கோட்டையில் உள்ளது. இதில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியபாலம் அமைக்கும் பணி கடந்த 40 நாட்களாக நடந்து வருகிறது.

40அடி அகலத்தில் அமைக்கப்படும் இந்த பாலத்திற்கு நாளை காங்கிரீட் போடப்பட இருந்தது. இந்த நிலையில் குளத்திற்கு வரும் வெள்ள நீரை வாய்க்காலில் திறந்துவிட்டதால் காங்கிரீட் போடுவதற்காக அமைக்கப் பட்டிருந்த தூண்கள்களை வெள்ளம் அடித்து சென்றது. இதனை தேடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+