திருப்பூரை தெறிக்க விட்ட நொய்யல் ஆறு- போக்குவரத்து நிறுத்தம்- வீடியோ
திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக நொய்யால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து வருவதால் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு நொய்யல் நதியில் நீர் சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை கடந்து, கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

தொழிற்சாலை சாயக்கழிவுகள் மற்றும் சாக்கடை கலந்து மிகக்கடுமையாக மாசடைந்துள்ள நொய்யல் ஆற்றில் இன்று அதிகாலையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், மங்கலம் கிராமத்தில் நொய்யல் ஆற்றங்கரையோரமுள்ள நல்லம்மான் கோயில் நீரில் மூழ்கியது.
ஈஸ்வரன் கோவில் வீதிபாலம், அணைபாலம் ஆகியவற்றின் மீது வெள்ள நீர் ஒடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், ஆண்டிப்பாளையம் காலேஜ் சாலையை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. உயர்மட்ட பாலமும் வெள்ளத்தில் மூழ்கியதால், இரு பாலங்களிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திருப்பூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications