மீண்டும் தலைதூக்கும் ”கார்பைடு” அரக்கன் - கோயம்பேட்டில் 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கற்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கால்சியம் கார்பைடு கற்கள் மூலமாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்வதாகவும், ஊசி மூலம் ரசாயனம் செலுத்தி தர்ப்பூசணியின் சதை உள்ள பகுதி நிறத்தை சிவப்பாக மாற்றி விற்பனை செய்வதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், கஸ்தூரி மற்றும் ராஜா ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாம்பழம் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மற்றும் கூடைகளில் சோதனை நடைபெற்றது.
சோதனை நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து மாம்பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தும் கால்சியம் கார்பைடு கற்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கால்சியம் கார்பைடு கற்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று தர்ப்பூசணி கடைகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களால் அஜீரண கோளாறு, தலைவலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். ஆகவே செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்யவேண்டாம் என்ற அறிவுறுத்தல் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் மாம்பழம் ஆகியவை அரும்பாக்கம் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாம்பழ சீசன்! புதினா போட்டு ஒரு சூப்பர் ஜூஸ் செய்யலாமா? உடலுக்கு குளிர்ச்சி பார்த்துக்கோங்க! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications