For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை: இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை

புதுவையில் தீபாவளியை முன்னிட்டு உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் இனிப்பு கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

புதுவை : தீபாவளியை முன்னிட்டு பலகாரக் கடைகளில் கலப்படம் செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்க பலகாரக் கடைகளில் மக்கள் கூட்டம் மொய்க்கின்றன. இதனை சாதகமாக்கிக் கொண்டு கடைக்காரர்கள் பலகாரங்களில் கலப்படம் செய்கின்றனரா என்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடைகளில் பலகாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய் தரமானதாக இருக்கிறதா என்று அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

 Food Security officers reviewed the shops at Puducherry

மேலும் இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் தான் நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றனவா, சுவைக்காக வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்படுகின்றனவா என்று அதிகாரிகள் சோதனை செய்தனர். தரமான நெய் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனையிட்ட அதிகாரி உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தக் கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

English summary
Food Security officers reviewed the shops at Puducherry and find out is there any adulteration done with the sweets and savouries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X