கோமாரி நோய்க்கு பலியான 175 மாடுகள்: முதுமலை சரணாலயம் வழியாக கால்நடைகள் கொண்டு செல்ல தடை

மழைக் காலங்களில், மாடுகளை கோமாரி என்ற நோய் தாக்கும். இந்த நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் பாதங்களில் புண்கள் உருவாகும். சில நாட்களில் அவை இறந்துவிடும். விவசாயிகள் இந்த நோயை, மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் என்று கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோமாரி நோய் தாக்குதலுக்கு மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் இம்மாவட்டத்தில் 175 மாடுகள் கோமாரி தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. நோயை கட்டுப்படுத்த, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவர்கள்
ஒவ்வொரு கிராமத்திற்கும் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று, நோய் தாக்குதல் குறித்து சோதனை நடத்தி, தேவையான சிகிச்சைகளை அளித்து வருவாக அத்துறை தெரிவித்துள்ளது.
கோமாரி நோய் பரவுவதை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த 5 மாட்டு சந்தைகள் சமீபத்தில் மூடப்பட்டன.
தெருவில் வீசப்படும் மாடுகள்
கடலூர் மாவட்டத்தில் நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போன மாடுகளை புதைக்காமல் வீரணம் ஏரிக்கரை அருகே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இறந்த மாடுகளை நாய்கள் சூழ்ந்து கொண்டுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதுமலை சரணாலயம்
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயப் பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே சரணாலய விலங்குகளுக்கு நோய் தாக்குவதை தடுக்க அந்த சாலை வழியாக மாடுகள், கால்நடைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications