சூறைக்காற்றுடன் கன மழை... சிவகாசியில் மரம் விழுந்து பெண் பலி
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது, சிவகாசியில் சூறைக்காற்று வீசியதில் மரம் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.
அக்னி நட்சத்திரம் தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் அநாயசமாக சென்சுரியைத்தாண்டி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தலைநகர் சென்னை இன்று அதிகபட்ச வெயிலை கண்டது, சாலைகளில் தகித்த அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கோடை மழையால் குளிச்சியடைந்துள்ளன. திருச்சி மாநகர் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆரம்பூர், மேளப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் நகர பகுதிகள் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. கோடை வெய்யிலின் தாக்கத்துக்கு மத்தியில் மழைபெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி அருகே உராம்பட்டியில் பலத்த மழையால் மரம் விழுந்து பெண் பலியாகியுள்ளார். காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். விருதுநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தத போதும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை
நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பகல் 1.30 மணி முதல் 2.30 மணிவரையிலும் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மே மாதத்தில் வழக்கமான கோடை மழையை
விடவும் அதிக அளவில் பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம், குலசேகரம் , பேச்சிப்பாறை, களியக்காவிளை தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை சென்னை மக்களை தவிர மற்றவர்களுக்கு கூல் சம்மராக உள்ளது என்றே சொல்லாம்.
-
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications