சூறைக்காற்றுடன் கன மழை... சிவகாசியில் மரம் விழுந்து பெண் பலி
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது, சிவகாசியில் சூறைக்காற்று வீசியதில் மரம் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.
அக்னி நட்சத்திரம் தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் அநாயசமாக சென்சுரியைத்தாண்டி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தலைநகர் சென்னை இன்று அதிகபட்ச வெயிலை கண்டது, சாலைகளில் தகித்த அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கோடை மழையால் குளிச்சியடைந்துள்ளன. திருச்சி மாநகர் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆரம்பூர், மேளப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் நகர பகுதிகள் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. கோடை வெய்யிலின் தாக்கத்துக்கு மத்தியில் மழைபெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி அருகே உராம்பட்டியில் பலத்த மழையால் மரம் விழுந்து பெண் பலியாகியுள்ளார். காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். விருதுநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தத போதும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை
நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பகல் 1.30 மணி முதல் 2.30 மணிவரையிலும் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மே மாதத்தில் வழக்கமான கோடை மழையை
விடவும் அதிக அளவில் பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம், குலசேகரம் , பேச்சிப்பாறை, களியக்காவிளை தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை சென்னை மக்களை தவிர மற்றவர்களுக்கு கூல் சம்மராக உள்ளது என்றே சொல்லாம்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications