வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்த போட்ட திட்டம் ''பணால்''
மதுரை: வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்ட நடத்த தமிழக அரசு போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தை புரட்சியாளர்கள் ஏற்க தயாராக இல்லை. நிரந்தர சட்டம் வரும் வரை போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.
இந்நிலையில் வலுக்கட்டாயமாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஊருக்குள் நுழையவிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அலங்காநல்லூர் மக்கள் எடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த காளையும் தர மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து முதல்வர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் இன்று காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கும் எதிர்ப்பு கிளம்பினால் முதல்வர் மதுரையில் இருந்து சென்னை கிளம்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் மதுரையில் தலைமைச் செயலாளர் கிரிஜாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications