பாலியல் தொழிலுக்காக சென்னைக்கு வரும் வட கிழக்கு மாநிலப் பெண்கள்... ஷாக் ரிப்போர்ட்
சென்னை: பாலியல் தொழில் புரிவதற்காக பல வெளிமாநில அழகிகள் சென்னைக்கு அழைத்து வரப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபச்சார சுற்றுலாவைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் போலீஸார் இறங்கியுள்ளனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பில்
சென்னை கே.கே.நகர் 69-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழில் செய்வதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனையிட்டனர்.

வட கிழக்குப் பெண்கள்
அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. அந்த வீட்டில் இருந்த வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், நாகலாந்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூர் காப்பத்தில் சேர்க்கப் பட்டனர்.

நாகாலாந்து புரோக்கர்கள்
மேலும், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபத்தியதாக நாகலாந்தை சேர்ந்த புரோக்கர் குரோம், ஆல்வின் எபினேசர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பல மாநிலங்களுக்கும் அனுப்பி
கைதானவர்களிடம் மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் தொழிலுக்காக வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.

3 பெண்கள் மீட்பு
அதேபோல், அடையார் பரமேசுவரிநகர் முதல் தெருவில் சொகுசு பங்களாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பெண் புரோக்கர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

4 மாதத்தில் 58 கேஸ்
கடந்த 4 மாதங்களில் மட்டும் 58 வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளதாகவும், 98 பாலியல் புரோக்கர்கள் கைதாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 125 இளம்பெண்கள் இத்தொழிலில் இருந்து மீட்கப் பட்டு காப்பகத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மீண்டும் மீண்டும் குழியில் விழும் பெண்கள்
காப்பகங்களில் சேர்க்கப்படும் மீட்கப்பட்ட பெண்கள் மீண்டும் இத்தொழிலுக்கே திரும்பும் அவல நிலையே இருப்பதாக கூறப்படுகிறது. ரயில் மற்றும் விமான மார்க்கமாக இத்தொழிலுக்கு அழைத்து வரப்படும் வட மாநில இளம்பெண்கள் புரோக்கர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

ஒரு புரோக்கரிடம் ஒரு மாதம்தான்
ஒரு புரோக்கர் வசம் இருக்கும் 10 பெண்கள் ஒரு மாதம் கழித்து வேறொரு புரோக்கரிடம் சென்று விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications