முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள்... சசிகலா புஷ்பா மீது மதுரை போலீஸ் வழக்கு!
மதுரை: முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது புதிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சசிகலாபுஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலி கையெழுத்து?
இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பாவும் அவரது குடும்பத்தினரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்தபோது, வழக்கறிஞர் முன்னிலையில் வக்காலத்து மனுவில் கையெழுத்து போடாமல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.

வழக்கு பதிய உத்தரவு
மேலும் முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடந்த 14-ந்தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை போலீஸ் வழக்கு
இதையடுத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. அதாவது நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்தது; போலியான ஆவணங்களை இணைத்தது, மோசடி செய்தல் என்பது உள்ளிட்ட பிரிவுகளில் கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில்.....
இதனிடையே சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவெ சசிகலா புஷ்பாவை கடந்த மாதம் 6 வாரங்கள் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications