For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுதலை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1991-96ம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தனன். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக 57 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்தாக வழக்கு தொடரப்பட்டது.

Former Minister Janarthanan released from property accumulation case

கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த சொத்து குவிப்பு வழக்கில் கடலூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. மேலும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்தது.

சிறை தண்டனையையும் அபராதத்தையும் எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

English summary
Former Minister Janarthanan has been released from property accumulation case. Chennai high court has canceled the 5 years jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X